Thursday, 25 February 2021

Ishq Mein Marjawan 2 - IMMJ2 Episode 194 Hindi Serial 16th February 2021 written update in Tamil








ரிதிமா வன்ஷிடம் நாங்கள் குழந்தையை கையில் ஏந்தும் நாளை ஆவலாக எதிர்பார்ப்பதாக கூறுகிறாள். நீங்கள் ஒரு முக்கியமான பொழுதை தவற விட்டு விட்டீர்கள் ஆனால் நான் அதை பதிவு செய்து கொண்டுவந்துள்ளேன் எனறு கூறி தான் பதிவு செய்து வந்த குழந்தையின் இதய துடிப்பு சத்தத்தை வன்ஷ் கேட்க வைக்கிறார். இருவரும் அழுகிறார்கள். உங்களை இந்த உலகின் சிறந்த தந்தையாக வர வைப்பேன் என்று ரிதிமா கூற வன்ஷ் கண்ணீரை துடைத்துவிட்டு கட்டிலில் படுக்கிறார். ரிதிமாவும் படுத்திருந்து யோசிக்கிறார் வன்ஷை குழந்தையிடமிருந்து தூர செல்ல வைக்கும் விடயம் என்ன? எதற்காக இத்தனை பயம் கலந்த குழப்பமாக இருக்கிறார் என்று நினைக்கிறாள். வன்ஷ் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் ஸ்கான் றிப்போட் எல்லாவற்றையும் யோசித்துப்பார்த்தபடி தூங்குகிறார். மறுநாள் காலை ருத்ரா சஞ்சலுக்கு நெக்லஸ் பரிசளிக்கிறார். என்ன இத்தனை சந்தோஷம் என்று கேட்க ருத்ரா பாடல் பாடி சஞ்சலை மகிழ்விக்கிறார். அவருடைய கழுத்தில் நெக்லஸ் அணிந்து காதலர் தின வாழ்த்து சொல்கிறார். அதற்கு சஞ்சல் என்னுடைய முதல் காதலே நகை தான் அதையே பரிசளித்துள்ளீர்கள் நீங்கள் என்னுடைய 2வது காதல் என்று கூறி நன்றி சொல்கிறார். 

இஷாணியும் ஆங்றியும் வருகிறார்கள். இஷாணி எதற்காக படத்தை பாதியில் நிறுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தீர்கள் என்று கேட்க ஆங்றி கீழே அமர்ந்து இஷாணிக்கு ரோஜா பூ கொடுத்து காதலர் தின வாழ்த்து சொல்கிறார். இஷாணியும் பதிலுக்கு வாழ்த்து கூற ஆங்றி அவருக்கு மோதிரம் அணிவிக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைக்கிறார்கள். 

வன்ஷ் ரிதிமாவை பிடிக்க ரிதிமா பயந்து போய் என்னை பயமுறுத்தி விட்டீhகள் என்று சொல்கிறார். அதற்கு வன்ஷ் இது பழைய ஜோக் என்று கூறி இன்று நீ பயந்து தான் ஆக வேண்டும் ஏனென்றால் நான் உன்னை கடத்த போகிறேன் என்று சொல்கிறார். அதற்கு ரிதிமா கடத்த போகிறீர்களா? என்னை கடத்துறது அவ்வளவு எளிதானதா? என்னுடைய கணவரைப்பற்றி தெரிந்தால் உங்களுடைய முடிவை மாற்றிவிடுவீர்கள் அவர் எனக்கு எப்படி எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்வது என்று பயிற்சியளித்துள்ளார் என்று சொல்கிறாள். வன்ஷ் சிரித்தபடி பல்லி என்று கூற ரிதிமா சத்தமிட்டபடி எங்கே பல்லி அதை முதலில் அங்கிருந்து அகற்றும் படி கூறி வன்ஷை கட்டியணைக்கிறாள். அப்போது வன்ஷ் உன்னுடைய கணவர் உனக்கு பயிற்சியளித்ததில் தவறிளைத்துவிட்டார் அவர் உனக்கு எவ்வாறு கடத்தல்காரர்களை கையாள்வது என்று தான் கூறியிருக்கிறார் ஆனால் அவர்கள் வைத்திருக்கும் இப்படியான சில வழிமுறைகளைப்பற்றி பயிற்சியளிக்க தவறிவிட்டார் என்று கூறுகிறார். ரிதிமா சிணுங்கியபடி நிற்க வன்ஷ் அவளுடைய கையில் முத்தமிட்டுவிட்டு கீழே இருந்து அவளிற்கு காதலர் தின வாழ்த்து சொல்கிறார். இன்று மாலை நான் உன்னை கடத்தி ஒரு அழகான இடத்திற்கு கொண்டு செல்ல போகிறேன். அங்கே நீயும் நானும் மட்டும் தான் இருப்போம் வேறு உறவுகளுக்கு இடமில்லை என்று வன்ஷ் கூற அதற்கு ரிதிமா வன்ஷின் கைகளை கோர்த்தபடி என்னை நீங்கள் கடத்திச் செல்வதற்கான நேரத்திற்காக ஆவலாக காத்திருக்கிறேன் என்று கூற இருவரும் கட்டியணைத்துக் கொள்கிறார்கள். அவர்களை வெளியிலிருந்து யாரோ ஒருவர் கண்காணித்துக்கொண்டிருந்தார். 

ரிதிமா சாமிக்கு விளக்கேற்றி வணங்கிவிட்டு கடந்த இரண்டு விபத்துக்களும் என்னை மிகவும் அச்சுறுத்திவிட்டது. வன்ஷ் தந்தையாவதற்கு எதற்காக அச்சமாக உள்ளார் என்றும் தெரியவில்லை. ஆனாலும் இன்று காதலுக்கான நாளில் எங்கள் குழந்தையை பற்றி வன்ஷிடம் எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு பண்ணுகிறார். அங்கிருந்து செல்ல நினைக்கையில் ரிதிமாவின் துப்பட்டா பட்டு விளக்கு அணைகிறது அதை பார்க்கமால் ரிதிமா செல்கிறார். அங்கே ஒரு துண்டு சீட்டு இருக்கிறது. அதில் மாலை உனக்கான பரிசு பூந்தோட்டமருகே இருப்பதாக எழுதியிருந்தது. இது வன்ஷின் சப்றைஸ் தான் என்று மகிழ்ந்த ரிதிமா அங்கிருந்து செல்கிறார். சிவப்பு கையுறை அணிந்தவர் அவற்றை பார்த்தபடி நிற்கிறார். ரிதிமா உடைமாற்றி வன்ஷிற்காக கீழே வருகிறார். அங்கே சியா இருந்து என்ன இன்று ரொம்பவே அழகாக இருக்கிறீர்கள் என்று கேட்க வன்ஷ் காதலர்தின சப்றைஸிற்காக தன்னை பூந்தோட்டத்திற்கு அழைத்திருப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து பூந்தோட்டத்திற்கு செல்கிறார். போகும் வழியில் ஆரியனுடன் மோதுகிறார் ஆரியன் மன்னிப்பு கேட்கிறார். காதலர் தின வாழ்த்துக்கள் கூறி விட்டு திரும்ப அவரின் பொக்கற்றிலிருந்து சிவப்பு நிற கையுறை கீழே விழுகிறது. ரிதிமா சென்றதும் அதை எடுத்து வைக்கிறார். சஞ்சல் தோட்டத்தில் பூ மரக்கன்றுகளை வெட்டியபடி நிற்கிறார். இஷாணி தோட்டத்தில் சிவப்பு நிறத்தில் ஏதோ புதைத்தபடி நிற்கிறார். ரிதிமா தோட்டத்திற்கு சென்று பார்க்கிறார் அங்கே யாரும் இல்லை வன்ஷ் என்று அழைத்தபடி செல்ல பின்னாலிருந்து ஒருவர் ரிதிமாவின் கண்களையும் கைகளையும் கட்டுகிறார். ரிதிமா வன்ஷ் இப்படியா சப்றைஸ் சரி சீக்கிரமாக என்னை அழைத்து செல்லுங்கள் என்று சொல்கிறார். கை கட்டும் போது ரிதிமாவின் வளையல் உடைந்து நிலத்தில் விழுகிறது. 

வன்ஷ் ரிதிமாவை அறையில் தேடிப்பார்க்கிறார் அங்கே இல்லையென்றதும் கீழே வருகிறார். அங்கு சியா அவர் வன்ஷின் சப்றைசிற்கக தோட்டத்திற்கு சென்றதாக கூறுகிறார். வன்ஷ் தான் ரிதிமாவை அழைக்கவில்லையே என்று நினைத்தபடி தோட்டத்திற்கு செல்கிறார். ரிதிமாவின் கைகளையும் கண்களையும் கட்டியவா ரிதிமாவை காரில் ஏற்றுகிறார். தானும் ஏறி உட்காருகிறார். ரிதிமாவுடன் காரில் அமர்ந்தது கபீர் இன்று என்னுடன் தான் உன் காதலர் தினம் என்று நினைத்தபடி கபீர் காரை ஸ்டாட் செய்கிறார். 

வன்ஷ் தோட்டத்தில் ரிதிமாவை தேடுகிறார் அங்கே அவரின் உடைந்த வளையல்களை பார்க்கிறார். எப்படியாலது நான் ரிதிமாவை காப்பாற்றுவேன் என்று கூறியபடி வளையல்களைப்பார்க்கிறார். 

Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media

#Riddhima #VanshRaisinghania 
#Vansh #kabir #immj 
#immj2 #IshqMeinMarjawan2 
#IshqMeinmarjwan2
#helly 
#RrahulSudhir 
#vishalvashishtha 
#hellyshah 
#rrahul 
#riansh 
#IMMJ 
#IMMJ2

Thursday, 18 February 2021

Ishq Mein Marjawan 2 - IMMJ2 Episode 193 Hindi Serial 15th February 2021 written update in Tamil






ரிதிமா வன்ஷிற்கு போன் எடுக்கிறாள் ஆனால் அவன் போன் வேலை செய்யவில்லை ஏன்; போன் வேலை செய்யவில்லை ஒரு வேளை அவர் வந்து கொண்டிருக்கலாம் நான் சற்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று நினைக்கிறார். அப்போது அங்கே ஒரு தம்பதிகள் இருக்க நீங்கள் சென்று டாக்டரை பாருங்கள் என்று ரிதிமா சொல்கிறார். அதற்கு அவர்கள் நாங்கள் டாக்டரைப்பார்த்து விட்டோம் ரிப்போட்டிற்காக காத்திருக்கிறோம் என்று சொல்கிறார். அப்போது அந்த இளைஞன் தன் மனைவியில் காலிலுள்ள சப்பாத்து லேசை கட்டி விடுகிறார். அப்போது ரிதிமா தானும் வன்ஷிம் இருப்பது போல் நினைத்துப்பார்க்கிறார். வன்ஷ் ரிதிமாவிற்கு ஷீ லேஸ் கட்டிவிடுகிறார். நீயும் எங்கள் குழந்தையும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் என்று கூறி ரிதிமாவின் வயிற்றில் முத்தமிடுகிறார். ரிதிமா வன்ஷின் நெற்றியில் முத்தமிடுகிறார். அங்கே வந்த நர்ஸ் நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்க ரிதிமா ஆமா என்று கூறி சிரிக்கிறார். வன்ஷ் வரட்டும் எங்களின் காதலின் அடையாளத்தை நாம் இருவரும் சேர்ந்தே பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அப்போது உங்கள் கணவர் வந்துவிட்டாரா என்று நர்ஸ் கேட்கிறார். 

என் கணவர் வந்து கொண்டிருப்பார் என்று நர்ஸிற்கு சொல்ல இன்னும் 10 நிமிடத்தில் உங்களுடைய முறை சீக்கிரம் அவர் வர வேண்டும் என்று சொல்கிறார். அப்போது யாரோ ஒருவர் ரிதிமாவின் ஸ்கானிற்கு பயன்படுத்தபோகும் ஜெல்லிற்குள் ஏதோ ஊசி மூலம் செலுத்துகிறார்கள். ரிதிமா திரும்பிப்பார்க்கிறார். யன்னல் கேட்டின் துணிகள் அசைகிறது ஆனால் அங்கு யாருமே இல்லை. ரிதிமா சற்று சேரம் காத்திருக்கும்படி நர்ஸிற்கு சொல்கிறார். அப்போது அங்கே கபீர் வருகிறார் அவரைப்பார்த்த ரிதிமா எதற்காக இங்கு வந்தாய் என்று கேட்க இது உன்னுடைய முதலாவது ஸ்கான் அதனால் தான் நான் வந்தேன் கண்டிப்பாக வன்ஷ் இங்கே வந்து தன்னுடைய தந்தைக்குரிய கடமையை செய்யமாட்டார் என்று சொல்கிறார். அதைக் கேட்;ட ரிதிமா போதும் நிறுத்து வன்ஷ் என்னுடைய கணவர் எங்களுடைய விடயத்தில் நீ தலையிட வேண்டாம் எனக்கு எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள தெரியும் நீ செல் என்று கூறுகிறார். அப்போது அங்கே வந்த டாக்டர் நல்லது குழந்தையின் தந்தையும் வந்துவிட்டார் என்று கபீரைப்பார்த்து கூற ரிதிமா இல்லை இவர் என் கணவரின் சகோதரன் என்னை இங்கே விட வந்தார் என்று சொல்கிறார். கபீரை செல்லும் படி ரிதிமா கூற கபீர் டாக்டரிடம் இவர்களை கவனமாக பார்த்துக்கொள்ளும் படி சொல்கிறார். ரிதிமா டாக்டருன் சென்று கட்டிலில் படுக்கிறார். டாக்டர் அந்த ஊசி மருந்து போட்ட ஜெல் போத்தலை எடுக்க நர்ஸ் வந்து அது பழைய ஜெல் இது தான் புதியது இதை பயன்படுத்துங்கள் என்று கூறி புதிய ஜெல் போத்தலை கொடுக்கிறார். டாக்டர் புதிய ஜெல் போத்தலை எடுத்தபடி நாங்கள் ஆரம்பிக்கலாமா என்று ரிதிமாவை கேட்கிறார். 

வன்ஷ் பியாணோ வாசித்த படி அது அருந்துகிறார் அப்படியே தன்னுடைய கசப்பான கடந்தகாலத்தை நினைத்துப்பார்க்கிறார். அப்போது கபீர் வந்து க்ளாஸை அவருடைய கையிலிருந்து வாங்கியபடி நீங்கள் உங்களுடைய தந்தை என்ற நிலையை நினைத்து மகிழ்வாக மது அருந்தினால் அனுமதிக்க முடியும் ஆனால் நீங்கள் அதை மறப்பதற்காக அருந்துகிறீர்கள் என்று கூற தன்னிடமிருந்து விலகி செல்லுமாறு கபீரைக் கூறுகிறார். அதற்கு கபீர் உங்களுக்கு உங்கள் குழந்தை தேவையில்லை நீங்கள் எந்தளவு கஷ்டத்தில் இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் உங்கள் கவலையை நான் போக்க நினைக்கிறேன் அந்த குழந்தையை நான் முழுமையாக பொறுப்பெடுத்துக் கொள்கிறேன் அப்போது நீங்கள் சுதந்திரமாக இருக்கலாம். அத்துடன் இன்று ரிதிமாவுடன் ஸ்கானிற்கு செல்லவில்லை ஆனால் நான் ரிதிமாவுடன் ஸ்கானிற்கு சென்றிருந்தேன் என்று கூற வன்ஷ் கபீரின் முகத்தில் அடிக்கிறார். உன்னுடைய எல்லைக்குள் நீ இருந்து கொள் எனக்கு என்னுடைய ரிதிமாவை பார்த்துக்கொள்ள தெரியும் என்று சொல்கிறார். கபீர் சிரித்தபடி அமைதியாக இருங்கள் வன்ஷ் உண்மையில் உங்களுக்கு உங்கள் குழந்தை மேல் அக்கறை பாசம் இருக்கிறதா என்பதைப்பார்க்கவே அப்படி கூறினேன் நான் அப்படி கூற உங்களுக்கு கோவம் வந்துவிட்டது என்னுடைய வேலை முடிந்து விட்டது என்று கூறி செல்ல வன்ஷ் கபீரை கழுத்தில் பிடித்து இழுத்து ரிதிமாவிடமிருந்து விலகி இருக்கும்படி எச்சரிக்கிறார். இல்லை என்றால் நான் என்ன செய்வேன் என்று உன்னால் கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியாது என்று வன்ஷ் கூற கபீர் அங்கிருந்து செல்கிறார். 

ரிதிமா வீட்டிற்கு வந்து வன்ஷ் எங்கே என்று பாட்டிம்மாவிடம் கேட்க எதற்காக இவ்வளவு களைப்பாக இருக்கிறாய் என்று பாட்டிம்மா ரிதிமாவிடம் கேட்டுவிட்டு அவளுக்கு பாதாம் பால் எடுத்து வருவதாக கூறி செல்கிறார். ரிதிமா ஸ்கான் றிப்போட் பார்த்து அற்த நிமிடங்களை நினைத்துப்பார்க்கிறார். வன்ஷ் நீங்கள் இந்த மகிழ்வான நிமிடங்களை பார்க்க தவறிவிட்டீர்கள் நீங்கள் வருவீர்கள் என்று நினைத்தேன் என்று சொல்லிக்கொள்கிறார். அப்போது பாட்டிம்மா வந்து அவளிற்கு பாதாம் பால் கொடுக்கிறார். அங்கே மறைந்திருக்கும் சிவப்பு கையுறை அணிந்த ஒருவர் அந்த பாதாம் பாலிற்குள் விஷம் கலந்ததை நினைத்துப்பார்க்கிறார். பாட்டிம்மா பாலைக்குடிக்கும் படி கூறுகிறார். சியாவை ஓவிய வகுப்பிலிருந்து அழைத்துவர தான் செல்வதாக கூறிவிட்டு பாட்டிம்மா அங்கிருந்து செல்கிறார். ரிதிமா பாலைக் குடிக்க செல்லும் போது வன்ஷ் வருகிறார். ரிதிமா பாலை வைத்துவிட்டு வன்ஷிடம் செல்கிறார். ஏன் வைத்தியசாலைக்கு வரவில்லை என்று கேட்க வன்ஷ அதை என்னிடம் கேட்க வேண்டாம் என்று சொல்கிறார் ரிதிமாவும் சரி நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள் முதலில் இந்த பாலைக்குடிக்கும் படி கொடுக்கிறாள். வன்ஷிம் பாலை அருந்துகிறார். பாலைக் குடித்ததும் வன்ஷ் இருமுகிறார் ரிதிமா தண்ணீர் எடுத்து வருவதற்கு சமையலறைக்கு செல்ல அங்கே ஒருவர் எலிப்பாஷாணம் இருந்து நச்சு போத்தலை தூக்கி போடுகிறார். ரிதிமா அதை பார்த்துக்கொண்டிருக்க கபீர் வந்து சத்தம் கேட்டு வந்தேன் வன்ஷ் நன்றாக இருக்கிறாரா என்று கேட்க ரிதிமா தெரியவில்லை ஏதோ உடல்நிலை சரியில்லாமல் தோணுகிறது என்று கூறுகிறார். பாட்டிம்மாவும் இல்லை எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என ரிதிமா கூற எதற்கும் கவலைப்பட வேண்டாம் நீ வன்ஷ் கூட இருக்கும் பொழுது அவரிற்கு எதுவும் ஆகாது சில சமயம் பால் ஒத்துக்காமல் இருந்திருக்கலாம் சற்று உப்புக்கலந்த நீர் குடிக்க வாந்தி வந்து சரியாகிவிடும் என்று கபீர் சொல்கிறார். ரிதிமாவும் தண்ணீரில் உப்பைக் கலக்கிறார் அப்போது கபீர் ரிதிமாவை தொட முயற்சிக்க வன்ஷ் அழைக்கிறார் ரிதிமா செல்கிறார். வன்ஷிற்கு அந்த உப்பு கலந்த தண்ணீரை குடிக்க கொடுக்கிறார். அவரின் முதுகைத் தட்டிக்கொடுத்துவிட்டு உங்களுக்கு வாந்தி வருவது போலிந்தால் வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு அறைக்கு செல்கிறாள். 

வன்ஷ் அறைக்குள் வந்து இப்போது நன்றாக உணர்கிறேன் அந்த உப்புக் கலந்த நீர் சரியாக்கிவிட்டது என்று சொல்கிறார். ரிதிமா வன்ஷை கட்டிலில் அமர வைத்துவிட்டு என்னாகியிருக்கும் பாட்டிம்மா எனக்கு பால் கொடுத்தார் அதற்குள் யாராவது எலிப்பாஷாண நஞ்சைக்கலந்திருப்பார்களா என்று நினைக்கிறாள். வன்ஷ் என்னாச்சு என்று ரிதிமாவிடம் கேட்க பாலில் எலிப்பாஷாணம் கலந்திருக்கலாம் நான் அந்த போத்தலை சமயலறையில் கண்டதாக கூறுகிறார். அதற்கு வன்ஷ் யாராவது வேலைக்காரர்கள் எலிக்கு வைத்துவிட்டு அங்கு தவற விட்டிருப்பார்கள் நீ கவலைப்பட வேண்டாம் எனக்கு ஒரு வேளை அதற்குள் போட்ட பாதாம் ஒத்துக்கொள்ளவில்லை போலும் என்று கூறுகிறார். அப்போது ரிதிமா நன்றி என்று கூறுகிறார் ஏன் என்று வன்ஷ் கேட்க நீங்கள் எங்கள் குழந்தையை காப்பாற்றி தந்தைக்குரிய கடமையை பூர்த்தி செய்து விட்டீர்கள் என்று சொல்கிறாள். அதற்கு வன்ஷ் நான் உன்னை தான் காப்பாற்றினேன் என்று கூறுகிறார். அப்போது ரிதிமா நான் உங்களுக்கு ஒன்று காட்ட வேண்டும் என்று கூறி ஸ்கான் ரிப்போட்டை எடுத்துக்காட்டுகிறார். அதைப்பார்த்த வன்ஷ் இது என்ன ஒரு புள்ளி தெரிகிறது என்று கேட்க அது எங்களுடைய குழந்தை என்று ரிதிமா கூறுகிறார். 

Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media

#Riddhima #VanshRaisinghania 
#Vansh #kabir #immj 
#immj2 #IshqMeinMarjawan2 
#IshqMeinmarjwan2
#helly 
#RrahulSudhir 
#vishalvashishtha 
#hellyshah 
#rrahul 
#riansh 
#IMMJ 
#IMMJ2

Ishq Mein Marjawan 2 - IMMJ2 Episode 192 Hindi Serial 13th February 2021 written update in Tamil





ரிதிமா வன்ஷிடம் வருகிறார் அப்போது வன்ஷ் கதிரையில் இருக்க அவர் செய்வதை போல தானும் எல்லாவற்றையும் செய்து கொண்டு இருக்கிறாள். வன்ஷ் சிரித்தபடி தன்னுடைய ஷட்டை கழற்றுகிறார் அப்போது ரிதிமா எதுவும் செய்ய முடியாமல் வன்ஷை பார்க்க இதை உன்னால் செய்ய முடியாது என்று சொல்ல ரிதிமா எசல்ல முயற்சிக்கிறார் அப்போது வன்ஷ் அவளைத்தடுத்து கண்டியணைக்கிறார். ரிதிமா என்பது என்னுடைய காதலின் மறுபெயர் அது என்னுடைய இதயத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று வன்ஷ் கூற அதற்கு ரிதிமா இன்னுமொரு சிறிய இடம் இல்லையா மேலும் ஓரு பெயர் எழுதுவதற்கு என்று கேட்க வன்ஷ் அங்கிருந்து செல்ல முற்படுகிறார் அப்போது ரிதிமா அவரைத்தடுத்து எனக்கு காரணம் சொல்லாமல் நீங்கள் செல்ல முடியாது எதற்காக உங்களால் நமக்கு ஒரு குழந்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறாமல் இங்கிருந்து செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று சொல்கிறாள். அதற்கு வன்ஷ் எனக்கு இதைப்பற்றி பேச இஷ்டம் இல்லை என்று கூறிவிட்டு செல்கிறார். சரி பறவாயில்லை இந்த விடயத்தில் நான் தோற்றுப்போக மாட்டேன் கண்டிப்பாக என்னுடைய சத்தியத்தை காப்பாற்றுவேன் என்று கூறுகிறாள். ரிதிமா குளியலறைக்கு சென்று நகத்திற்கு பூச்சு பூசுகிறார். அங்கே கையில் கத்தியுடன் வருகிறார்கள். யாரோ குளியலறைக்கதவை திறக்க ரிதிமா சென்று பார்க்கிறார். அங்கு யாருமே இல்லை.

சியா ரிதிமா மற்றும் வன்ஷிற்கு ஒரு பரிசு கொடுக்க நினைத்து அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறார். அங்கே அழகான குழந்தை தொட்டில் வைத்திருந்தார். அதைப்பார்த்த ரிதிமா மகிழ்ச்சியாக சியாவை கட்டியணைக்கிறார். ரிதிமா குழந்தை பொம்மை ஒன்றை காட்டுகிறார். எப்போது புதுமணத்தம்பதிகள் தாய் தந்தையாகிறார்களோ அவர்கள் இந்த குழந்தை பொம்மையை வைத்து எப்படி குழந்தையை பராமாரிப்பது என்று பழகிக்கொள்ளலாம் நானும் வன்ஷிம் பழக தான் இதை வாங்கினேன் என்று கூற சியா மிகவும் நல்லது என்று கூறிவிட்டு செல்கிறார். இதையெல்லாம் காட்டி எனக்குள் தந்தைக்குரிய உணர்வை கொண்டுவரலாம் என்று நினைக்கிறாயா இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று வன்ஷ் ரிதிமாவைக் கேட்க அவள் குழந்தை பொம்மையை வன்ஷ் கையில் கொடுக்கிறார். வன்ஷ் அந்த பெண்மணி கூறிய வார்த்தைகளை நினைத்துப்பார்த்துவிட்டு உடனே அந்த பொம்மையை ரிதிமாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். நான் எப்படியாவது எல்லாவற்றையும் உங்களுக்கு புரியவைப்பேன் என்று கூறியபடி சென்று தூங்குகிறார். 

திடீரென ஏதோ சத்தம் கேட்டு ரிதிமா எழுந்து பார்க்கிறார். வன்ஷ் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அந்த சத்தம் யாரோ லா லா லா என்று படிப்பது போல இருக்க சுற்றிப்பார்க்கிறார் ஆனால் அவர்கள் அறையில் சியா கொடுத்த தொட்டில் இல்லை. ரிதிமா எழுந்து சத்தம் வந்த இடத்தை நோக்கி செல்கிறார். மாடியிலிருந்து கீழ் நோக்கி ஹாலுக்கு செல்கிறார் அங்கு பிரதாக வாயில் கதவு திறந்து இருக்க அதை மூடிவிட்டு திரும்பிப்பார்க்கிறார் அங்கே அவள் அறையிலிருந்த தொட்டில் இருக்கிறது அங்கு சென்று பார்க்க அதற்குள் அவர்கள் வைத்திருந்து குழந்தை பொம்மை கை கால்கள் எல்லாம் கழற்றப்பட்ட நிலையில் இருக்கிறது. பதற்றமாக ரிதிமா அவற்றை எடுத்து மீண்டும் பொருத்தி வைக்கிறார். இதை உடனடியாக வன்ஷிடம் கூற வேண்டும் என்று நினைத்து செல்ல நினைக்கிறார் ஆனால் மீண்டும் யோசித்துவிட்டு வன்ஷ் இப்போது குழந்தையை நினைத்து குழப்பத்தில் இருக்கிறார் இப்போது நாங்கள் இருவரும் ஆபத்தில் இருக்கிறோம் என்று நினைத்து சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறார். எப்படியாவது இதை நானே கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தபடி திரும்பி நடக்க அங்கே யாருடைய நிழல் தெரிவதைப்பார்க்கிறார். 

ரிதிமா அங்கே ஆங்றி நிற்பதைப்பார்க்கிறார். ரிதிமாவைப்பார்த்த ஆங்றி நீங்கள் இங்கேயா என்று கேட்க ரிதிமா அவரைப்பார்த்து நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று கேட்க ஆங்றி தூக்கம் வரவில்லை எழுந்து நடந்து nகொண்டிருக்க ஏதோ பாடல் சத்தம் கேட்க இங்கே வந்ததாக கூறி உங்களுக்கும் அந்த சத்தம் கேட்டிச்சா என்று கேட்க ரிதிமா ஆங்றிக்கு உண்மை கூறினால் வன்ஷிடம் கூறிவிடுவார் என்று நினைத்து இல்லை எனக்கு தூக்கம் வரவில்லை அது தான் இங்கு சற்று நடக்கலாம் என்று நினைத்து வந்தேன் என்று கூறினார். சரி நான் தூங்க போகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார். ரிதிமா ஏதோ தப்பாக தெரிகிறது யார் இப்படியெல்லாம் செய்கிறார்கள் கண்டிப்பாக இதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். 

மறுநாள் காலை ரிதிமா வன்ஷிற்கு போன் பண்ணி எங்கே இருக்கிறீர்கள் நாங்கள் ஸ்கான் எடுக்க ஹாஸ்பிடல் செல்ல வேண்டும் என்று கூற வன்ஷ் காரை நிறுத்துகிறார். அப்போது ரிதிமா உங்க குழந்தை உங்களைப் போலவே மிகவும் பிடிவாதமாக இருக்கிறது என்னை 3 தடவை வாந்தியெடுக்க வைத்துவிட்டது என்று கூற சரி நீ அங்கே செல் நான் வருகிறேன் என்று வன்ஷ் கூறுகிறார். எப்படியாவது நான் வன்ஷை சமாளித்து என் வழிக்கு கொண்டு வந்து விடுவேன் என்று நினைக்கிறார். ரிதிமாவை யாரோ பின்தொடர்கிறார்கள். வன்ஷ் காருக்குள் இருந்து நான் ஸ்கானிற்கு வரபோவதில்லை எனக்கு அது பிடிக்கவில்லை. என்னுடைய குழந்தைக்கு இந்த உலகத்தில் இடமில்லை நானும் ரிதிமாவும் மகிழ்ச்சியாக வாழலாம் எதற்கு இப்போ இந்த குழந்தை ஐ லவ் யூ ரிதிமா ஆனால் நான் தந்தையாக முடியாது என்று நினைக்கிறார். அப்போது அவரிற்கு ஒரு மெசேஜ் வருகிறது. 

வன்ஷ் ஆங்றிக்கு போன் செய்து நான் வந்துகொண்டிருக்கிறேன் மீற்றிங்கிற்கு ஆயத்தம் செய்யும்படி கூறுகிறார். வன்ஷ் தன்னுடைய சிறுவயது காலத்தை நினைத்துப்பார்க்கிறார். அப்போது அவரிற்கு வியர்த்து மிகவும் குழப்பமாக இருந்தது. ரிதிமாவின் கைப்பை கீழே விழ அதை கீழே இருந்து எடுக்கிறார். அருகில் இருந்த வாகனத்தை ஒருவர் ரிதிமாவை நோக்கி தள்ளி விடுகிறார் அதற்குள் மிகவும் கூர்மையான கம்பிகள் இருக்கிறது. ரிதிமா நிமிர்ந்து பார்த்துவிட்டு அதிலிருந்து விலகி தன்னைக்காப்பாற்றிக்கொள்கிறார். வன்ஷை கட்டுப்பாட்டை இழந்து கார் ஓட்டியபடி செல்ல அவரிற்கு முன்னால் ஒரு ஆட்டோ வந்து கொண்டிருக்க வன்ஷ் காரைத்திருப்பி நிறுத்துகிறார். இங்கே ரிதிமா வயிற்றில் கையை வைத்து பயப்பட வேண்டாம் நான் உனக்கு எதுவுமே ஆக விடமாட்டேன் கண்டிப்பாக நீ பாதுகாப்பாக இருப்பாய் என்று கூறி கடவுளுக்கு நன்றி சொல்கிறார். வன்ஷ் காரை விட்டு வெளியே எழுந்து வருகிறார். வன்ஷ் எங்கே என்று நினைத்தபடி ரிதிமா நிற்கிறார். வன்ஷின் கைகள் நடுங்க என்னை தனியாக விடுங்கள் எனக்கு என்னாகிறது என்று கேட்டபடி இருக்கிறார். 

Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media

#Riddhima #VanshRaisinghania 
#Vansh #kabir #immj 
#immj2 #IshqMeinMarjawan2 
#IshqMeinmarjwan2
#helly 
#RrahulSudhir 
#vishalvashishtha 
#hellyshah 
#rrahul 
#riansh 
#IMMJ 
#IMMJ2

Friday, 12 February 2021

Ishq Mein Marjawan 2 - IMMJ2 Episode 191 Hindi Serial 12th February 2021 written update in Tamil






அனைவரும் நடனமாடி மகிழ்ந்தபடி இருக்க இஷாணி வன்ஷ{ம் ரிதிமாவும் மகிழ்வாக இருந்து பியாணோ வாசிப்பாதை பார்த்து கோவமாக செல்ல வன்ஷ் சென்று இஷாணியை தடுத்து நாங்கள் சிறுவயதில் ஒன்றாக நடனம் பயில சென்றோம் இப்போது சேர்ந்து நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என்று கூறி இஷாணியுடன் நடனமாடுகிறார். நடனமாடியபடி நீ கவலையாக இருக்கிறாய் என்று தெரியும் ஆனாலும் என்னை நம்பு கண்டிப்பாக உன்னை மகிழ்வாக வைத்திருப்பேன் என்று கூற இஷாணி பிறந்தநாள் பார்ட்டியில் நடந்தவற்றை நினைத்துப்பார்த்தபடி வன்ஷிடமிருந்து விலகி ஆங்றியுடன் சென்று நடனமாடுகிறார். வன்ஷ் விலகிச் செல்கிறார் பாட்டிம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த ரிதிமா இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார். கபீர் இன்று எப்படியாவது ரிதிமாவின் தலையில் ரோஜா பூ வைத்தே ஆகணும் என்று முடிவு பண்ணிவிட்டு ரிதிமாவின் பின்னால் சென்று அவளின் தலையில் பூ வைத்துவிடுகிறார். ரிதிமா சிரித்துக்கொண்டு வன்ஷ் என்று அழைத்தபடி திரும்பிப்பார்க்க பின்னால் யாழுமே இல்லை கபீர் சென்று மறைந்து கொள்கிறார். வன்ஷ் வர ரிதிமா எங்கே சென்றீர்கள் உங்களை தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறாள். இருவரும் இணைந்து நடனமாடுகிறார்கள். 

அனைவரும் மகிழ்வாக சிரித்தபடி அவர்களின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தார்கள். வன்ஷ் கைகளை விரித்து நிற்க ரிதிமா சிரித்தபடி நிற்கிறார். எதற்காக ரிதிமா பறவைபோல் உயர்ந்து நடனமாடவில்லை என்று நினைக்க ரிதிமா அவரை நெருங்கி என்னால் இந்த நடனத்தை ஆடமுடியாது என்று சொல்ல எதற்காக? நீ நன்றாக இருக்கிறாயா என்று கேட்க நன்றாக இருக்கிறேன் ஆனால் ஒருவரின் பாதுகாப்பு கருதி என்னால் அப்படி நடனமாட முடியவில்லை என்று சொல்கிறாள். வன்ஷ் சுற்றிப்பார்த்துவிட்டு யாருடைய பாதுகாப்பு என்று கேட்க ரிதிமா வன்ஷின் கையை வயிற்றில் வைத்து சிரித்தபடி நீங்கள் என்ன உணருகிறீர்கள் நீங்க தான் இந்த உலகின் தலைசிறந்த தந்தை என்று சொல்கிறாள். வன்ஷ் அதிர்ச்சியுடன் அந்த பெண்மணி கூறிய வார்த்தைகளை நினைத்துப்பார்க்கிறார். நீங்கள் இப்போது உலகின் மிக உயர்ந்த சந்தோசத்தை அனுபவிப்பீர்கள் என்று சொல்ல வன்ஷ் கால்களை பின்னோக்கி வைக்கிறார். என்னாச்சு வன்ஷ் என்று ரிதிமா கேட்க எதுவுமே கூறாமல் வன்ஷ் அங்கிருந்து செல்கிறார். ரிதிமா வன்ஷ் என்று அழைத்துக்கொண்டு சென்று தேடிப்பார்க்கிறார். அப்போது வன்ஷ் நிற்பதைப்பார்த்து நீங்கள் இங்கே நிக்கிறீர்களா நான் எல்லா இடமும் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் உங்களுக்கு எவ்வளவு பெரிய நல்ல செய்தியை கூறி இருக்கிறேன் ஆனால் நீங்கள் சந்தோஷமாக இல்லையே என்னாச்சு எதற்காக இந்த சந்தோஷத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டு தன்னைப்பார்க்கும் படி வன்ஷின் முகத்தை திருப்ப வன்ஷ் அவளைப்பார்க்கிறார். 

மேலும் ரிதிமா நான் நினைத்தேன் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று ஆனால் ஏதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறீர்களே அப்படியென்றால் நீங்கள் எப்படி இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறீர்களா என்று கேட்கிறாள். அதற்கு வன்ஷ் என்னை தனிமையில் இருக்க விடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து செல்ல அதற்கு ரிதிமா எதற்காக இப்படி இருக்கிறீர்கள் என்ற காரணத்தை கூறிவிட்டு நீங்கள் சென்று தனியாக இருங்கள் அதற்கு முன் நான் கேட்ட கேள்விக்கு பதிலைக்கூறி விட்டு செல்லுங்கள் என்று சொல்கிறாள். வன்ஷ் ஏதுமே சொல்லாமல் செல்ல உங்களின் பதில் கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று ரிதிமா கூறி அதிலிருக்கும் மெழுகுவர்த்தி சுவாலை மேல் கையை வைத்தபடி இருக்கிறார். வன்ஷ் திரும்பிப் பார்த்துவிட்டு ஓடி வந்து ரிதிமாவை அவளின் கைக்கு முதலுதவி பண்ணுகிறார். அப்போது ரிதிமா உங்களின் மௌனம் என்னை ரொம்பவே காயப்படுத்துகிறது நாங்கள் தாய் தந்தையாக போகிறோம் இது எங்கள் வாழ்வின் மிகப்பெரிய சந்தோஷம் அதாவது எங்களின் வாழ்க்கை புதிய இடத்திற்கு செல்கிறது என்று சொல்கிறாள். வன்ஷ் அமைதியாக நிக்கிறார். நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்கள் என்னுடன் உங்கள் வாழ்க்கையை கடைசிவரைக்கும் வாழ நினைக்கிறீர்கள் ஆனால் நமக்காக குழந்தை மட்டும் வேண்டாமா? அதை நினைத்து நீங்கள் சந்தோஷமாக இல்லையா? என்று கேட்க வன்ஷ் நிறுத்து ரிதிமா என்று சற்று கோவமாக என்னால் இந்த தந்தை என்னும் பொறுப்பை நிறைவேற்ற முடியாது என்று சொல்கிறார். 

ரிதிமா வன்ஷை தன் கண்களைப்பார்க்கும்படி சொல்கிறார். உங்களால் இந்த பொறுப்பை நிறைவேற்ற முடியும் நீங்கள் தானே கூறினீர்கள் ராகினிக்கு அப்புறம் உங்களுக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை காதலிக்க பிடிக்கவில்லை என்று ஆனால் இப்போது என்னை உயிராக காதலிக்கிறீர்கள் உங்கள் கணவனுக்கான கடமைகளை சரியாக செய்கிறீர்கள் என்னால் உங்களை நல்ல தந்தையா மாற்ற முடியும் என்று சொல்கிறாள். அதற்கு வன்ஷ் உனக்கு என்னுடைய கடந்தகாலத்தைப்பற்றி தெரியாது என்று கூற அதற்கு ரிதிமா நான் சொல்வதைக் கேளுங்கள் நீங்கள் தானே எப்போதும் கூறுவீர்கள் நம்முடைய கடந்தகாலம் எப்படி இருந்தாலும் பறவாயில்லை நம்முடைய எதிர்காலத்தில் நாங்கள் சிறந்த அம்மா அப்பா என்று கூற அதற்கு வன்ஷ் எனக்கு தந்தையாவதற்கு இஷ்டமில்லை என்று கூறிவிட்டு செல்கிறார். மறுநாள் காலை ரிதிமா குளியலறையிலிருந்து மிகவும் சோர்வாக வருகிறார். மீணடும் சென்று வாந்தியெடுக்கிறார் அப்போது வன்ஷ் நீ நன்றாக இருக்கிறாயா என்று கேட்க ரிதிமா கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்து வயிறு வலியாக உள்ளது டாக்டரை வரவழைக்கும்படி கூறுகிறாள். வன்ஷ் ரிதிமாவை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு டாக்டருக்கு போன் பண்ணுகிறார்.

டாக்டர் ரிதிமாவை பரிசோதித்துவிட்டு எதற்கும் கவலைப்பட வேண்டாம் தாயும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் இப்படி ஏற்படுவது சஜயம் தான் நன்றாக ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் ரிதிமாவை அழைத்துக்கொண்டு சில பரிசோதனைக்காக வைத்தியசாலை வரும்படி சொல்ல வன்ஷ் சரி என்று கூற டாக்டர் செல்கிறார். வீட்டிலுள்ள அனைவரும் ரிதிமாவின் அறைக்கு வருகிறார்கள். சியா எதற்காக டாக்டர் வந்தார் என்று கேட்க அதற்கு இஷாணி அவர் மகப்பேற்று நிபுணர் நான் கர்ப்பமாக இருந்தபோது பார்த்தேன் என்று சொல்ல பாட்டிம்மா எனக்கு புரிந்துவிட்டது ரிதிமா கர்ப்பமாக இருக்கிறாள் என்று கூறி அவளை கட்டிணைத்து முத்தமிடுகிறார். அனைவரும் ரிதிமாவைப்பார்த்தபடி நிற்கிறார்கள். இஷாணி கைகளை தட்டியபடி வாழ்த்துக்கள் அண்ணா என்கிறாள். சியா நான் அத்தையாக போகிறேன் எனக்கு இலவசமாக விளையாட்டு பொருட்கள் கிடைத்துவிடும் வாழ்த்துக்கள் என்று சொல்கிறார். பாட்டிம்மா ரிதிமாவை ஓய்வெடுக்கும் படி சொல்கிறார். வன்ஷிடம் ரிதிமாவை பார்த்துக்கொள்ளும் படி கூறிவிட்டு செல்கிறார். வன்ஷ் ரிதிமாவைப் பார்க்கிறார். 

ஆரியன் கோவமாக ரிதிமா மற்றும் வன்ஷின் போட்டோவை காயப்படுத்துகிறார். வன்ஷின் குழந்தை இந்த உலகத்திற்கு வந்தால் அவனுடைய எல்லா சொத்துக்களும் குழந்தைக்கு சென்றுவிடும் என்னுடைய எல்லா திட்டங்களும் வீணாகி போய்விடும் அதனால் அவனுடைய குழந்தை இந்த உலகத்தைப்பார்க்க கூடாது என்று சொல்கிறார். இஷாணி பிறந்தநாள் விழாவில் வன்ஷ் ரிதிமாவை காப்பாற்றியதை நினைக்கிறார் அப்படியென்றால் ரிதிமா கர்ப்பமாக இருந்தமையால் அவர் என்னுடைய குழந்தையை பலி கொடுத்து ரிதிமாவின் குழந்தையை காப்பாற்றியிருக்கிறார் இப்போ ரிதிமா எனக்கு சொல்லும் நற்செய்தி என்னுடைய குழந்தை உயிரைப்பறித்து அவளுடைய குழந்தையை வாழ வைத்திருப்பது. ரிதிமாவும் வன்ஷிம் என்னை ஏமாற்றிவிட்டார்கள் அதனால் ரிதிமா சந்தோஷமாக இருக்க கூடாது என்று நினைக்கிறாள். பாட்டிம்மா ரிதிமாவின் கையில் மருதாணி போட்டு விட்டு உனக்கு விரும்பியதை சாப்பிட்டு உடல்நிலையை கவனமாக பார்த்துக்கொள்ளும் படி சொல்கிறார். சாஞ்சல் கோவமாக ரிதிமாவுக்கு குழந்தை பிறந்தால் ஆரியனுக்கு எந்த உரிமையும் கிடைக்காது என்று புலம்பியபடி காய்கறிகளை வெட்டுகிறார். அப்போது கத்தி அவரின் கையை வெட்ட ரத்தம் வருகிறது அதைப்பார்த்து இந்த இரத்தம் தான் இந்த பிரச்சினைக்கான தீர்வு என்று நினைக்கிறார். சியா பாட்டிம்மா ரிதிமாவுக்கு போட்ட மருதாணியை பார்த்து அழகாக இருக்கிறது போட்டோ எடுக்கலாம் என்று கூறி படங்கள் எடுத்து மகிழ்வாக இருக்கிறார்கள். ரிதிமா எப்படியாவது வன்ஷ் தன்னுடைய குழந்தையை ஏற்றுக்கொள்ள ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்திக்கிறார். இவற்றைப்பார்த்து கொண்டிருந்த கபீர் எனக்கு நன்றாக தெரியும் வன்ஷ் இந்த குழந்தையை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார் அதனால் விரைவில் நீ என்னிடம் வந்துவிடுவாய் என்று நினைக்கிறார்.

Update Credit to: Arunthathi Kanagaratnam (AK) Kanex Media

#Riddhima #VanshRaisinghania 
#Vansh #kabir #immj 
#immj2 #IshqMeinMarjawan2 
#IshqMeinmarjwan2
#helly 
#RrahulSudhir 
#vishalvashishtha 
#hellyshah 
#rrahul 
#riansh 
#IMMJ 
#IMMJ2